“ஓதுவீராக”
திடுக்கிட்டு எழுந்து
உட்கார்ந்தேன்
இருள் சூழ்ந்த அமைதி
உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது
குளிரும் வெப்பமும் மாறி மாறி
உடலெங்கும் பரவத்தொடங்கிட்டு
போர்வையை எடுத்து மூடிக்கொள்கிறேன்
மீண்டும் “ஓதுவீராக”
என்ற சத்தம் இடிபோல்
ஒலித்து அதிர்ந்தது
யாரையும் காணவில்லை
மூன்றாவது முறையாகவும்
அந்த மர்மமான குரல் ஒலித்தது
இல்லை, நான் ஓதமாட்டேன்
என மறுத்துவிட்டேன்
அந்தக் குரலுக்கும் எனக்குமிடையில்
சண்டை தொடங்கிவிட்டது
நான் சொன்னதை
செய்ய மறுக்கிறாய்
சரி, நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்று
நீண்ட வாதாட்டத்தின் பின் கேட்டது
இப்போதுதான் உடல் நடுக்கம் நின்றது
போர்வையை உதறி எறிந்துவிட்டு
உற்சாகமாக பேசத் தொடங்கினேன்
“சாப்பிடுவீராக” என்று
சில பழங்களைத் தந்திருக்கலாம்
“கொளுத்துவீராக” என்று
சில விறகுக் கட்டைகளைத் தந்திருக்கலாம்
“உறிஞ்சிக் குடிப்பீராக” என்று
சில பால் பக்கட்டுகளையும்
ஒரு டம்ளர் மதுவையும் தந்திருக்கலாம்
“உண்பீராக” என்று
சிறு கோதுமை ரொட்டியைத் தந்திருக்கலாம்
”கேட்பீராக” என்று
அரச மாளிகைகளில் எழும் இசையின்
ஓசைகளைத் தந்திருக்கலாம்
“பார்ப்பீராக” என்று
வறுத்த மீன் குழம்பின் ஓவியத்தை
தந்திருக்கலாம்
இருட்டுக்குள்ளிருந்து
வெளிப்பட்ட அந்தக் குரல்
“ஓப்பீராக” எனக் கத்தியது
திடுக்கிட்டு எழுந்தால்,
மண்ணெண்ணெய்க்கு வரிசையில் நிற்கிறேன்
அடுத்து எனது முறை
அசடு வழிந்தோட
வீட்டுக்கு புறப்படுகிறேன்
00000000000000000