”50வது இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நிரலுக்குள் புலிப் பாசிசவாதிகளின் கைகள் உள்ளே நுழைந்து, தனது ஆட்டத்தை ஆடிய கதையை இந்தக் கட்டுரை சொல்கிறது. இந்த பாசிச ஆதரவாளர்களின் பின்கதவுவழியான நுழைவு பற்றி தயமந்திக்கு தெரியாமல் இருக்காது. அதேபோல், முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஜனநாயகவாதியாக மாறி நின்ற கருணாகரணுக்கும் தெரியாமல் இருக்காது. (முன்பும் ஒரு முறை முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஜனநாயகவாதியாக மாறிய சயந்தன் போன்றவர்கள் அக்கரைப்பற்றிலும் ஒரு நிகழ்வை நடந்தியிருந்தனர். அதற்கும் எனது எதிர்வினையை ஆற்றியிருந்தேன் என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்டுகிறேன். )
மஹிந்த குடும்பத்தின் கைகளிலிருந்து அதிகாரம் விலகிச் சென்றபின், கருணாகரனின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த “புலி” முழுமையாக விழித்துக்கொண்டதோ என்று சந்தேகமும் எழும்பாமலில்லை. இந்தச் சந்திப்பில் பங்கேற்ற பலர் அப்பாவிகள். அவர்களுக்கு இதுவொன்றும் தெரியாது. இதன் பின்னாலுள்ள அரசியல் இழுபறிகள் எல்லாம் அறியாதவர்கள். மைக்கும் மேடையும் கிடைத்தால் போதுமானது என கருதும் “பைங்கிளி இலக்கியவாதிகள்தான்” அதிகம். சிலவேளை சிலர் மறைமுகமான புலிப் பாசிசத்திற்கு ஆதரவானர்களாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாது.
அரச பாசிசம், புலிப்பாசிசம் என அனைத்துக்கும் எதிராக செயற்படும் இலக்கியப் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்கள் நம்மிடையே இல்லையே!. ஈழத்தில், இலக்கியம் என்பது பொழுபோக்கு அல்லது முசுப்பாத்தி மட்டுமே. நியூட்டன் மரியநாயகம் அவர்கள் பாசிசத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பை, அந்த எதிர்பாளர்களின் கைகளில் இருந்து இதுவரை மூன்று முறை, புலிப்பாசிச ஆதரவாளர்கள் கைப்பற்றியதாக வேறு தகவல் சொல்கிறார். லண்டனில் ஒரு முறையும், தாயகத்தில் இருமுறையும் நடாத்தப்பட்டிருக்கிறது என்று தனது மகிழ்ச்சியைக் கூடப் பதிவு செய்திருக்கிறார்.
கருணாகரனால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஒரு சந்திப்பும், அனலைதீவில் தயமந்தியால் நடாத்தப்பட்ட ஒரு நிகழ்வும் இவற்றில் அடங்குகிறது. நியூட்டன் மரியநாயகத்தின் பதிவை இணைத்திருக்கிறேன் நீங்கள் வாசிக்கலாம். இது குறித்து தற்போது விரிவாக ஏதும் எழுதும் எண்ணமில்லை. ஆய்வு வேலைகளில் தீவிரமாக இருப்பதனால் சாத்தியக் குறைவு. நிச்சயமாக, ஈழத்துப் போர் இலக்கியம் என்ற எனது ஆய்வு நூல் வெளிவந்த தும் அது அநேக விசயங்களை வெளிப்படுத்தும். ”
நியூட்டன் மரியநாயகத்தின் கொண்டாட்டமான பாசிச மனநிலையை வாசிக்க.
சமூகவிரோத- அதிகாரத்துவத்தின் கைத்தடியாகிப்போன ஐரோப்பிய இலக்கியசந்திப்பும் – அதை அனலைதீவுக்கு “கடத்திவந்த ” கதையும் …
சில மாதங்களாக , இலக்கிய சந்திப்பு பற்றிய இழுபறி இணையஊடகங்களின் வியாபித்திருந்தது. ” வியாபித்திருந்தது” என்று கூறுவதன் மூலம், இலக்கிய சந்திப்பு எதோ பெரிய நிகழ்வு என்பதுபோல உங்களுக்கு படலாம். உண்மை அதுவல்ல.
- பற்றிய இழுபறியில் ஈடுபட்டவர்கள், ஒரு பத்து புலம்பெயர்ந்த “இலக்கிய ” அரசியல்வாதிகளும் – அவர்களின் ஆதரவாளர்கள் சிலபேருமே ஆகும். இலக்கிய சந்திப்பை எனது ஊரவனான பவுண் , என்ற தமயந்தி அனலைதீவுக்கு கடத்திக்கொண்டு போய்விட்டதாக நீண்ட கதைகளை இணையத்தில் எழுதினார்கள் இவர்கள் . அதேவேளை,மேற்படி கும்பலுக்கு நெருக்கமான ஒரு நபராகவே பல வருடமாக தமயந்தி அவர்கள் செயற்பட்டு வந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ் மக்கள் மீதான கொலைகளையும் , கொடுமைகளையும் நிகழ்த்திய மஹிந்த அரசுடன் சேர்ந்து நின்ற இந்த “இலக்கிய ” அரசியவாதிகளுடன் –
புதிதாக சேர்ந்துள்ள முன்னாள் -புலி ஜனநாயகவாதிகளும் தமயந்தியை இலக்கிய சந்திப்பை “கடத்தியவர் ” என்று வர்ணிதனர் ……
வன்முறை – மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள், பாலியல் வன்முறை மிரட்டல்கள் செய்து – நோர்வேயில் -குறிப்பாக தலைநகர் Oslo- வில் முற்போக்கு தேசிய சக்திகளையும், புலியின் அரசியலையும் விமர்சித்தவர்களையும் வாய்மூடவைத்தவர்கள், மஹிந்தவின் அடிவருடிகளுடன் சேர்ந்து கொக்கரித்தார்கள். முன்னாள் மஹிந்த அரசுசார்பான கும்பல் இப்போ, ரணில் – ராஜபக்ஷ கும்பலாக இயங்குகிறது என்பதையும் இங்கே குறிப்பிடுவது, நடைமுறை அரசியலை விளங்கிக்கொள்ள உதவியாக இருக்கும்.
இங்கு நான் எழுதுவது வாசகர்கள் பலருக்கு அடியும் விளங்காது – முடியும் விளங்காதென எனக்கு எனக்கு தெரியும்… ஆதலினால், வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக இலக்கிய சந்திப்பு பற்றிய எனது “வரலாற்று ” பார்வை ….
..
இந்திய-இலங்கை ஒப்பந்தகாலத்தில் பெரும்பாலான தமிழ்த்தேசிய இயங்களில் இருந்து போராளிகள் மேற்கு நாடுகளுக்கு புலப்பெயர்ந்தார்கள். இவர்களின் சிலரும். பிரபாகரன் , துரையப்பாவை கொலை செய்து இரத்தம் காய முன்னமே பெர்லினுக்குள்ளால் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து. தாம் தான் துரையப்பாவை சுட்டவர்கள் என உரிமை கோரி அகதி அந்தஸ்தை “கண்டு பிடித்தவர்களும் ” சேர்ந்து அரசியல்-இலக்கிய இதழ்களை வெளியிட்டார்கள்.
இவர்களில் பலர் புலிகளுக்கு எதிரான கருத்தையே கொண்டிருந்தனர். புளொட் , EPRLF ஆதரவாளர்களாக பெரும்பாலும் இயங்கிய இவர்கள் , புலிகளை பாசிசசக்தியாக வரையறுத்தார்கள். இவர்களின் முயற்ச்சியினாலேயே ஜெர்மனியில் இலக்கிய சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில், முக்கிய பங்காற்றியது மார்சிஸவாதிகள், பெண்ணியவாதிகள், முற்போக்குவாதிகள், தமிழ் தேசியவாதிகள், சர்வதேசியவாதிகள் எனத் தம்மை முன்னிறுத்திய – பார்த்திபன் என்ற அன்று பிரபல எழுத்தாளராக படம்காட்டபட்ட நபரின் தலைமையினான குழுவாகும்.
இந்த குழுமம், இலங்கையில் சரிநிகர் பத்திரிகையை சர்வதேசநிதியுதவியுடன் நடத்திய NLFT , Plot , தீப்பொறி இயக்க பின்னணியை கொண்ட சரிநிகர் குழுமத்தினால் உள்வாங்கப்பட்டது. அதேபோலவே, சுவிஸில் இயங்கிய அதிதீவிர “மார்சிஸவாதிகள்”, “பெண்ணியவாதிகள்”, “முற்போக்குவாதிகள்” , “தமிழ் தேசியவாதிகள்” , “சர்வதேசியவாதிகள்” நடத்திய மனிதம் சஞ்சிகையை குழுமமும் சரிநிகருக்குள் அக்கியமாகியது.
சரிநிகர் குழுவுடன் அக்கியமாகியவர்களே மிகதீவிரமான முறையில் இலக்கிய சந்திப்பை நடத்தினார்கள். இந்த இலக்கிய சந்திப்புகளில் இலக்கியத்தை தவிர பெரும்பாலும் பேசப்பட்டது அரசியல் மட்டுமே ! வசனங்களை சொற்களாக அடுக்கி, புலிக்கெதிராக கவிதை எழுதுவதே அன்று பெரும்இலக்கியமாக கருதப்பட்ட நிலையில், சில சிறுகதைகளையும் , பெரும்கதைகள் சிலவற்றையும் அச்சில் வெளியிட்டவர்கள் மாபெரும் இலக்கியவாதிகளாக கருதப்பட்டார்கள்.
இவர்களில் சிலரில் கொள்கையாக – குறிக்கோளாக இருந்தது இலங்கையில் புலிகளுக்கு எதிரான ஒரு மாற்று முற்போக்கு அரசியல் இயக்கத்தை உருவாக்குவதேயாகும் .
சரிநிகரில் இயக்கியவர்கள், அரசியல் உதிரிகள் மற்றும் தீப்பொறி இயக்கத்தை சேர்த்தவர்களின் பின்னணியில் மாற்றுஇயக்கங்களை உருவாக்கும் முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்டது.
அது தேசபக்தன் குழு, “தமிழ் ஈழ கட்சி”, மூன்றாவது பாதை போன்ற முயற்சிகளாகும் …. . இந்த முயற்சிகள், சரிநிகர் குழுமம் புலிகளுடன் பின் கதவால் அக்கியமாகியது போலவே, புலிகளை தேசிய சக்தி என வரையறுத்து, புலிகளுடன் கரைந்தன.
இந்த இடைவெளியில் லண்டன்- பாரிஸ்- பெர்லினை “தளமாக ” கொண்டவர்கள் இலக்கிய சந்திப்பை திட்டமிட்டு கைப்பற்றினார்கள். இவர்கள் , மேற்க்கூறிய புலிகளுடன் கரைந்தவர்களை போலன்றி, பெரும் புலிவெறுப்பையும் – இலங்கை அரசுக்கு சார்பான அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தனர். EPRLF , plot , புலிகள் இயக்கங்களின் பின்னணியை கொண்ட இந்த குழுமம், இலங்கை அரசுடன் நேரடியாக தொடர்பில் இருந்தது. புலிகளை அழிக்கும் இலங்கை அரசு -மற்றும் ராணுவத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வேலைகளை செய்தார்கள். இந்த குழுமத்துடன், புலிகள் மற்றும் இலங்கை அரசின் ஒடுக்குமுறை அரசியலுக்கு எதிராக செயற்பட்ட நேர்மையான மக்கள் அரசியலை செய்ய முயன்றவர்கள் சிலரும் இருந்தார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. இந்த நேர்மையான சக்திகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஐரோப்பாவில் ஒன்றும், கிளிநொச்சியில் ஒன்றுமாக இரண்டு இலக்கிய சந்திப்புகளில் நானும் கலந்து கொண்டுள்ளேன். லண்டனில் நடந்த சந்திப்பில் “புலம்பெயர்ந்த இளையோர் சமுதாயத்தின் எதிர்காலம்” பற்றி உரையும் நிகழ்த்தியுள்ளேன் .
இலக்கிய சந்திப்பை கைப்பற்றிய இலங்கை அரசின் அடிவருடிகள் பிற்காலத்தில் தமக்குள் “பெயர்ப்பலகை ” அல்லது “postbox ” அமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். தலித்தியம், பெண்ணியம் , “பின்நவீனத்துவம் ” போன்ற “பெயர்ப்பலகை ” களுடன் இயக்கினார்கள். இந்த காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து சில கழுசடை எழுத்தாளர்களும், அந்தோணிசாமி மார்ஸ் போன்ற அறிவாளிகளும் இவர்களின் “வழிகாட்டிகளாக ” இருப்பதாக படம்காட்டப்பட்டது.
சாதிஎதிர்ப்பும் தலித்தியமும் பேசிய இவர்களுக்கு, யாழ்பாணத்து புலி-plot பின்னணியை கொண்ட வேளாளர்கள் முன்னிலை கொடுத்தார்கள். தம்மை அல்லைப்பிட்டி நளவன், அனலைதீவு பள்ளன் என பொய் கூறி “இலக்கிய ” அரசியல் செய்த யாழ்ப்பாண வேளாளர்களின் அதிகாரம் இந்த குழுமத்தில் தழைத்தோங்கியது. பழைய வெள்ளாளிய கிழட்டு புலிகள் இவர்களுக்கு தலித்திய அரசியல் ஆலோசகர்களாகவும் விளங்கினார்கள்.
என்னதான் இவர்கள் “தலித்தியம்”, “பெண்ணியம்” , “பின்நவீனத்துவம் ” பேசினாலும், இவர்களின் வேலைத்திட்டம் புலிஅழிப்பையும் – ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக- அவர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படுவதையுமே குறிக்கோளாக கொண்டிருந்தது.
புலிகளுடன் முரண்படுவதும் – அதன் அரசியலுக்கு எதிராக இயங்குவதும் தவறான செயல் அல்ல. அவ்வாறு இயங்குவது சமூகநலன் பாற்பட்டது . ஆனால், புலிஎதிர்ப்பை முன்னிறுத்தி: ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்கு எதிராக – அவர்களின் எதிரிகளுடன்- அதிகாரத்துடன் சேர்ந்து நின்று இயங்கியது-இயங்குவது தான் இவர்களின் மக்கள் விரோதத்தனமாகும் !
சமாதான காலத்தில் கருணா தலைமையில் புலிகள் உடைந்த வேளையிலும் – பின்பு பிள்ளையானுடன் கட்சிதொடங்கி அரசியல்வாதியாக வலம்வர தொடங்கிய காலத்திலும், இதே மக்கள் விரோத குழுமம், இலக்கிய சந்திப்பை பாவித்து , மேற்படி “பிரிந்த ” புலிகளை நியாயபடுத்தினார்கள். இவர்கள் புலிகளின் இருந்த போது முஸ்லிம்கள், தமிழ்-சிங்கள சிவில் மக்களுக்கு எதிராகசெய்த கொலைகள், கொடுமைகள் அனைத்தும் “புலிகள் செய்தார்கள் ” , இந்த இருவருக்கும் தொடர்பில்லை என்ற தொனிப்பொருளில் பிரச்சாரம் செய்தார்கள்.
பெண்களுக்கு எதிராக இவர்கள் செய்த கொலைகள், பாலியல்வன்முறைகள் , இலக்கியசந்திப்பு சார்ந்திருந்த “பெண்ணிய வாதிகளால்” பேசாப்பொருளாக – பேச கூடாத பொருளாக ஆக்கப்பட்டது. அதேவேளை , புலிகளினால் கடத்தி கொலை செய்யபட்ட செல்வி தியாகராச, புலிகளினால் படுகொலை செய்யபட்ட ரஜினி திரணகம போன்றவர்களின் கொலைகள் உரத்துப் பேசப்பட்டது. இன்றும் எதோ மேற்படி இருவரை மட்டுமே புலிகள் கொலை செய்தார்கள் என்பதுபோலவே இலக்கிய சந்திப்புகளில் படம் காட்டப்படுகிறது. பிள்ளையானும், கருணாவும் , இலங்கை அரசாங்கமும் தமிழ் பெண்களுக்கு எதிராக – இலங்கையின் பெண்களுக்கு எதிராக எதுவும் செய்யாதது போலவே இன்றும் கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது .
புலியெதிர்பு- இலங்கை அரசசார்பு கைத்தடியாக விளங்கிவரும் இலக்கிய சந்திப்பு குழுமத்தின் முக்கியமான குறிக்கோள் 2009- வைகாசி போர் முடிவுடன் நிறைவேறியது. இலக்கிய சந்திப்பை கட்டுப்படுத்தும் தலித்திய பிரமுகர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு போரை முடித்து வைத்தற்காக நன்றி சொன்னார்!!! ! இலக்கியசந்திப்பை போர் முடிந்து சில காலத்திலேயே இலங்கைக்கு ஏற்றுமதி செய்து, கொலைகார மஹிந்த கும்பலின் ஆட்சி “இயல்பாகவே தமிழ் மக்களின் எழுத்து-பேச்சு சுதந்திரத்தை மதிக்கிறது” போன்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள் .
……
இவர்களிடமிருந்தே, அவர் வாழும் நோர்வேயில் 50-வது இலக்கிய சந்திப்பை நடத்தப்போவதாக பொறுப்பெடுத்தார் இலக்கியவாதி தமயந்தி. கொரோனா மற்றும் உலக பொருளாதார காரணங்களினால் உடனேயே நோர்வேயில் அதை நடத்த முடியவில்லை. மாறாக, பல வருடங்களாக, தீவுப்பகுதி சமூக, பொருளாதார , கலாச்சார அடிப்படையில் பின்னிலையில் உள்ளதனை முன்னிறுத்தி – தீவக பிரச்சனைகளை ஓரளவுக்கேனும் வெளிக்கொணரும் முயற்சியாக அனலைதீவில் 50-வது இலக்கியசந்திப்பை ஒழுங்கு செய்தார் தமயந்தி. இதை பொறுத்து கொள்ளாமலேயே, மேற்படி இலங்கை அரசசார்பு “இலக்கிய” குழுமமும்- புதிதாக ஜனநாயக ஞானோதயம் பெற்ற பழைய புலிகளும், தமயந்தியையும் அவருடன் சேர்ந்து இலக்கிய சந்திப்பை அனலைதீவில் நடத்த முயன்றவர்களையும் தோச்சு காயப்போட்டார்கள் இணையதளங்களில் .
…
இலக்கிய சந்திப்பின் முதல்நாள்( 29.07.2023)நானும் கலந்து கொண்டேன். தமிழ் இலக்கியத்துடன் எந்தவித சம்பந்தமும் கிடையாத நான் – அனலைதீவு இலக்கியசந்திப்பின் முதன் நாள் நான் பங்கு கொண்டது, தமயந்தி என்ற எழுத்தாளரின் எல்லாவகை அரசியலுக்கோ – அல்லது அவரின் இலக்கிய உறவுகளுக்கோ ஆதரவு வழங்குவதற்காக அல்ல. ! நான் கலந்து கொண்டதற்கான முக்கியகாரணம், நான் பிறந்து வளர்ந்த தீவுப்பகுதியின் வரலாறையும் – அழிவையும், வனப்பையும் – அதன் சீரழிவையும் கொஞ்சமேனும் வெளிக்கொணர , எனது ஊரவன் செய்யும் முயற்சிக்கு ஆதரவு வழங்குவதற்காகவே! எமது கடல்மீது நடத்தப்படும் கொடுமைகள் மற்றும் இயற்கை அழிவு அரசியலை வெளிக்கொணர எனது ஊரவனான பவுண் என்ற கடல்மைந்தன் முன்னெடுத்த முயற்சிக்கு சிறு ஆதரவை வழங்குவதற்காகவே!
முதல்நாளின் தொடக்கத்திலேயே, கடல் அரசியல் பேசப்பட்டது. கிழக்கின் எழுத்தாளர்கள் – கடலியல் இயற்கைசார் அறிவாளரின் பாரிய பங்களிப்புடன் நடந்த இந்த நிகழ்வானது, ஐரோப்பாவில் பத்து பேர் கூடி மாறிமாறி முதுகு சொறியும் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக, அனலைதீவின் பொதுமக்களும் பங்கெடுத்த நெகிழ்ச்சியானதாக நிகழ்வாக நடைபெற்றது.
- உணவு இடைவேளைக்கு முன்பாக, மண்டபத்துக்கு வெளியில் சிலர் கூடி நின்று பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்த போது, பாரிசில் இருந்து இலக்கிய சந்திப்பை கட்டுப்படுத்தும் இலங்கை அரச சார்பு குழுமத்தின் பிரதிநிதியாக ஒருவர் அனலைதீவு இலக்கியசந்திப்பிற்கு வந்திருப்பதாக எனக்கு கூறப்பட்டதுடன், அவர் இலக்கிய சந்திப்பை பொறுப்பெடுத்து மறுபடியும் ஐரோப்பாவுக்கு கொண்டு போக போவதாகவும் சொல்லப்பட்டது.
” அதாவது, அந்த கும்பல் கடத்தப்படாதென கூறப்படும் இலக்கியசந்திப்பை மீட்க, ஒருவரை அனுப்பியிருக்கிறார்கள் போல “…. என்றேன் நான் .
- எந்த பிரதிபலிப்பு எழவில்லை. மேலே நான் எழுதியுள்ள அரச சார்பு குப்பலின் வரலாறை கூறி , மிக காட்டமாக எனது கருத்தை வெளியிட்டேன். அப்போதும், எவரும் எதுவும் சொல்லவில்லை. பின்புதான், தெரிந்தது அவ்விடத்தில் “மீட்ப்புபணியை” முன்னெடுக்க பாரிஸிலிருந்து வந்த பிராஸ்பதியும் அவ்விடத்தில் நின்றார் என்பதனை !
….
இப்போ , இலக்கிய சந்திப்பு நடந்து முடிந்து விட்டது . பாரிஸ் பிரதிநிதி “மீட்ப்புபணியை” செவ்வனே நிறைவேற்றி அதனை ஐரோப்பாவுக்கு பத்திரமாக கொண்டு போய் விட்டதாக அறிவித்தலும் வந்து விட்டது . அந்த அறிவித்தலை பிள்ளையானின் ஆலோசகரும் , “பிரபல இலக்கியவாதியும்”, “ஜனநாயக காவலருமான” M R ஸ்டாலின் ஞானம், கீழ்வருமாறு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் ” ‘இலக்கியச் சந்திப்பு’ மீண்டும் பொலிவுடன் தனது 51 வது நிகழ்வை விரைவில் பிரான்ஸில் நடாத்தவுள்ளது”.
இலக்கியசந்திப்பு, அனலைதீவில் “பொலிவிழந்து ” நடந்தது போலவும், இனி; பாரிஸ் நிகழ்வில்தான், இழந்து போன பொலிவை மீட்கப்போவதாகவுமே ஞானத்தின் மேற்படி கருத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. காசு சேர்த்து விமானத்தில் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி, இலக்கிய சந்திப்பை “மீட்டது” மட்டுமல்லாது, இலக்கியச்சந்திப்பின் “பொலிவையும் மாறுசீரமைக்கும்” ஞானத்தின் அவாவானது , தொடர்ந்தும் அவர் சார்ந்துள்ள ஜனநாயக்கமறுப்பு கும்பலின் அடாவடித்தனங்களை நியாயப்படுத்த இலக்கியசந்திப்பு இன்றும் கூட தேவைப்படுவதையே காட்டுகிறது….
…
ஞானத்தின் பொலிவிழந்தமை பற்றிய கருத்துக்கு, தமயந்தி கீழ்வருமாறு தமது முகப்புத்தகத்தில் எதிர்வினையறியுள்ளார் :
- இத்தனை நிறங்களா நமது இலக்கியவாதிகளில்?
அடடா….. இத்தனை காலம் இது
தெரியாமல்ப் போச்சே.”..
“இதில் மூட, மறைக்க எதுவுமில்லை.
50வது இலக்கியச் சந்திப்பை தீவில் நடத்தியதால் தீட்டுப் பட்டுவிட்டதாக, தீக்குளிக்காத குறையாக ஒப்பாரி வைக்கும் இலக்கிய லூசுகளைப் பற்றித்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.”
- சந்திப்புக்கு தீட்டுபட்டுதோ … படவில்லையோ நானறியேன் ! ஆனால், அனலைதீவில் சந்திப்பை நடத்தி மக்களுக்கு பிரியோசனமானதாக – அதிகாரங்களுக்கு எதிராக அதை மாற்ற முயன்ற பவுண் என்ற தமயந்தியின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவரும் இலங்கையில் ஒரு சுயாதீனமான நிகழ்வை ஆரம்பிக்க வேண்டுமென்பது எனது சிறு கோரிக்கையும் – வேண்டுதலுமாகும்.
Newton Marianayagam
Melinchimunai, Kayts
1 .08.2023